» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரச் செயலாளராக எம்.எஸ்.முத்து தேர்வு

ஞாயிறு 20, அக்டோபர் 2024 6:01:29 PM (IST)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளராக எம்.எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகரக் குழு 24ஆவது மாநாடு மாசிலாமணிபுரத்தில் உள்ள பி சி வேலாயுதம் நினைவரங்கத்தில் வைத்து நடைபெற்றது. மாநாட்டு கொடியினை மாநகரக் குழு உறுப்பினர் இல. ராமமூர்த்தி ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.ராஜா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். 

மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து வேலை அறிக்கை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாநாட்டை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் பேசினார். மாநாட்டில் புதிய செயலாளராக எம்.எஸ்.முத்து, இல. இராமமூர்த்தி,.கே.ஆறுமுகம், எம்.கமலம் எம்.காஸ்ட்ரோ, வி.கருப்பசாமி, ஜே.ஆனந்த்,. ஏ.ஜான்சன், ஆர்.ஸ்ரீநாத், ஆர்.இனிதா எம்.கிஷோர் கொண்ட புதிய மாநகர குழு தேர்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், வீட்டுமனை பட்டா இல்லா மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் காவல் நிலையத்தை பிரித்து புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும்.பெண்கள் -குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


மக்கள் கருத்து

KATHIROct 21, 2024 - 01:27:42 PM | Posted IP 162.1*****

CONGRAGULATIONS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory