» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரச் செயலாளராக எம்.எஸ்.முத்து தேர்வு
ஞாயிறு 20, அக்டோபர் 2024 6:01:29 PM (IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளராக எம்.எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகரக் குழு 24ஆவது மாநாடு மாசிலாமணிபுரத்தில் உள்ள பி சி வேலாயுதம் நினைவரங்கத்தில் வைத்து நடைபெற்றது. மாநாட்டு கொடியினை மாநகரக் குழு உறுப்பினர் இல. ராமமூர்த்தி ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.ராஜா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து வேலை அறிக்கை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாநாட்டை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் பேசினார். மாநாட்டில் புதிய செயலாளராக எம்.எஸ்.முத்து, இல. இராமமூர்த்தி,.கே.ஆறுமுகம், எம்.கமலம் எம்.காஸ்ட்ரோ, வி.கருப்பசாமி, ஜே.ஆனந்த்,. ஏ.ஜான்சன், ஆர்.ஸ்ரீநாத், ஆர்.இனிதா எம்.கிஷோர் கொண்ட புதிய மாநகர குழு தேர்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில், வீட்டுமனை பட்டா இல்லா மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் காவல் நிலையத்தை பிரித்து புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும்.பெண்கள் -குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
KATHIROct 21, 2024 - 01:27:42 PM | Posted IP 162.1*****