» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் : குறைந்தபட்ச கூலியை வழங்க கோரிக்கை!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 8:43:40 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் குறைந்தபட்ச சட்ட கூலியை வழங்க கோரி இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் மேயர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், சிஐடியு தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால், குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த முடியாது என மறுத்த ஒப்பந்த நிறுவனம் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று (அக்.22) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கம் தூய்மை பணியாளர், ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
PitchuOct 22, 2024 - 10:20:24 AM | Posted IP 162.1*****