» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாலையில் கொட்டிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய இந்து முன்னணி அமைப்பினர்!
செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:43:10 PM (IST)
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் எதிரே நெடுஞ்சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லியை இந்து முன்னணியினர் அகற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கொட்டி கிடந்ததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து காவலர் முத்துக்குமார் உடன் இணைந்து இந்து முன்னணியினர் ஜல்லியை அகற்றினர். இப்பணியில் இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, ராஜா, கார்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
JAIHINDOct 22, 2024 - 02:46:44 PM | Posted IP 172.7*****