» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST)
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மகன் தடிகாரன் (எ) கரும்பன் (62). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்கு நிலுவையில் இருந்து உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வர இருந்தது.
இந்த நிலையில் கரும்பன் தனது வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)





SivaSriFeb 4, 2025 - 02:15:27 PM | Posted IP 172.7*****