» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி, மானூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:23:25 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் கூடத்தில் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு பணிபுரிபவர்களிடம் சமையல் செய்யும் இடம் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், அதே போன்று உணவின் தரம், சுவை குறித்து ஆய்வு செய்து, அலுவலர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டுமெனவும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு, வெள்ள நிவாரண நிதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.4 இலட்சம் செலவில் மானூர் ஊராட்சி ஒன்றியம் குப்பக்குறிச்சி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 பயனாளிகளின் வீடுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டடத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பதிவேடுகள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வில், உதவி திட்ட அலுவலர் (ஊரக வேலைவாய்ப்பு) இசக்கியப்பன், மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகாந்த், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
