» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள், பணம் கொள்ளை: நெல்லையில் பரபரப்பு
சனி 15, பிப்ரவரி 2025 10:25:14 AM (IST)
நெல்லையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் தச்சநல்லூர் ரவுண்டானா அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பிறகு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். பின்னர் நேற்று மதியம் 12 மணியளவில் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மேஜையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரதது 870 மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் நைசாக வந்து டாஸ்மாக் கடை ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து பணம், மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
