» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
சனி 15, பிப்ரவரி 2025 3:33:35 PM (IST)
நெல்லையில் கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதகுளம் மேற்கு புதுக்கோட்டை கட்டிடம் தெருவை சேர்ந்தவர் குருபாதம் மகன் பிரைட் ஜூவர்ட்ஸ் (34). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதே கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் பிரைட், கடந்த 12 ஆண்டுகளாக இந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர், அதே கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரின் செல்போனுக்கு ஆபாச ‘மெசேஜ்’ அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் கோமதி, போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் மாணவிக்கு கல்லூரி பேராசிரியர் பிரைட் ஜூவர்ட்ஸ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உறுதியானது.
இதையடுத்து நேற்று இரவு மருதகுளத்தில் வீட்டில் இருந்த பிரைட் ஜூவர்ட்சை கைது செய்தனர். இதனிடையே கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவன் ஒருவனுடன் பழகி வந்ததாகவும், அதனை பேராசிரியர் அறிந்து அவர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை தனக்கு சாதகமாக அந்த பேராசிரியர் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவியுடன் பழகி வந்த அந்த மாணவனை ‘சஸ்பெண்டு’ செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

peyar illatha KallooriFeb 16, 2025 - 07:40:04 AM | Posted IP 162.1*****