» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மும்மொழி கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் மாநில உரிமைகளான கல்வி, இடஒதுக்கீடு ஆகியவற்றை பிரிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது. இது மாநில உரிமையை பறிப்பதாகவும், கல்விக்கொள்கையில் தலையிடுவதாகவும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளை திரும்ப பெறக்கோரியும், மும்மொழி கல்விக்கொள்கையை மத்திய அரசு திணிப்பதை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன் நேற்று போராட்டம் நடத்தினர். மாநில துணை தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது மாணவர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் தர்ஷிகா, இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 34 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் அழைத்து சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)
