» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக பட்ஜெட்டில் சுரண்டை நகராட்சி புறக்கணிப்பு : பொதுமக்கள் அதிருப்தி

ஞாயிறு 16, மார்ச் 2025 10:42:04 AM (IST)

தமிழக பட்ஜெட்டில் சுரண்டை நகராட்சி பகுதிக்கு திட்டங்கள் அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் மைய பகுதியான சுரண்டை வளர்ந்து வரும் வணிக நகரமாகும் சுரண்டை நகராட்சி பகுதியில் மட்டும் தற்போது சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டும் என எதிர்பார்த்திருந்தனர். பல அலுவல்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும் பட்டியலில் சுரண்டையும் இருந்தது. மாவட்ட ஆட்சித்தலைவரும் அரசு அலுவலகங்கள் அமைக்கும் இடங்களை தேர்வு செய்ய பார்வையிட்டார் ஆனால் இதுவரை எந்த அரசு அலுவலகங்களும் புதிதாக அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் சுரண்டையில் 50 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என சுமார் 30 வருடங்களாகவும் சுரண்டை சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு போக்குவரத்து கழக பனிமனை அமைக்க வேண்டும் என சுமார் 40 வருடங்களாகவும் சுரண்டையில் இருந்து ஊத்துமலை வரை இரட்டை குளம் கால்வாய் அமைக்க வேண்டும் என சுமார் 55 வருடங்களாகவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் பல முறை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளை பார்த்து வலியுறுத்தியும், சட்டமன்றத்தில் பேசியும் வந்துள்ளார். மேலும் தொகுதியின் டாப் டென் கோரிக்கையில் இம் மூன்று திட்டத்தையும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இம் மூன்று திட்டத்திற்கான இட வசதியையும் ஏற்பாடு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டும் சென்றுள்ளனர்.
 
ஆகவே தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இம் மூன்று திட்டத்தையும் அறிவிக்கப்படும் என இப் பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.ஆனால் பட்ஜெட்டில் இத்திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை இதனால் இப் பகுதி பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்

ஆகவே தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் டாக்டர் கலை கதிரவன் ஆகியோர் இந்த கோரிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி நடப்பு கூட்டத்தொடரில் இத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மும்மூர்த்திகளான இவர்கள் இருவருக்கும் போது இல்லை என்றால் எப்போது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory