» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 12:09:48 PM (IST)
களக்காடு அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் மோகன் (54). இவர் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை உடற்கல்வி அறைக்கு தனியாக வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு சென்ற மாணவிக்கு மோகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வெளியே ஓடி வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மோகனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திங்கள் 17, மார்ச் 2025 12:06:15 PM (IST)

தமிழக பட்ஜெட்டில் சுரண்டை நகராட்சி புறக்கணிப்பு : பொதுமக்கள் அதிருப்தி
ஞாயிறு 16, மார்ச் 2025 10:42:04 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு அடி-உதை : நெல்லையில் பரபரப்பு
சனி 15, மார்ச் 2025 8:20:41 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் நெல்லை மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் திடீர் மரணம்!
சனி 15, மார்ச் 2025 3:43:19 PM (IST)

திருநெல்வேலியில் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வெள்ளி 14, மார்ச் 2025 9:26:13 PM (IST)

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம் : ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 14, மார்ச் 2025 5:11:01 PM (IST)
