» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தேசிய திறனாய்வு தேர்வில் நாசரேத் பள்ளி மாணவர் மாவட்டத்தில் முதல் இடம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:49:35 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ் தேசிய திறனாய்வு தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் இடத்தையும், தமிழக அளவில் 5ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. அதில், மர்காஷிஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிற ஆழ்வார்திருநகரி மாணவர் ஆகாஷ் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடமும், தமிழக அளவில் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளார். மேலும், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆல்பி ஜோன்ஸ், காட்சன் ஜீடா, பிரதீப்ராஜ், சித்தார்த், கார்த்திக் சிவராஜா ஆகியோர் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ருபாய் 12ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது. தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளிக்க ஆசிரியர்களையும் பாராட்டிப் பேசினார்.
உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், ஆசிரியைகள் அமுதா வில்சி தங்கம், சோபியா பொன்ஸ் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

RajaduraiApr 16, 2025 - 10:23:47 PM | Posted IP 162.1*****