» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் : பொதுமக்கள் அவதி
வியாழன் 17, ஏப்ரல் 2025 8:05:00 AM (IST)

தூத்துக்குடி பூபாலராயர்புரம் 6வது தெரு பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் பூபாலராயர்புரம் 6வது தெரு மத்தி பகுதியில் குடிநீர் விநியோக முறையில் ஏற்பட்டு வரும் குழப்பம் ஒரு புறம் இருக்கும் பட்சத்தில், குடிநீர் சப்ளையில் ஏற்பட்டுள்ள மாயாஜாலம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. குடி நீர் முறையில் வெளிவரும் தண்ணீர் முழுமையாக சாக்கடை நீராகவே வெளிவருகிறது.
கோடைகால தேவையில் குடி நீரின் அவசியத்தை மாநகராட்சி மறந்துவிட்டதால் இந்த அவலமும், அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த அவலத்தையும், அபாயத்தையும் உடணடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து, பொதுமக்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று பூபாலராயர்புரம் 6வது தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
இனிApr 17, 2025 - 07:04:16 PM | Posted IP 162.1*****
கொஞ்ச நாள்ல கால்வாய், பாதாள சாக்கடை, மலை நீர் சேகரிப்பு, எல்லாம் சேர்ந்து ஒன்னாகி செப்டிக் டேங்க் ஆறு ஓடும்.
இது தான்Apr 17, 2025 - 07:02:36 PM | Posted IP 172.7*****
உருப்படாத மாநகராட்சியின் சாக்கடை பயலுகளின் வேலை
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

BabuApr 18, 2025 - 01:35:38 PM | Posted IP 172.7*****