» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!

திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகுமார், ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி தொடங்கி வைத்தார். 

ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆர் வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோயால் கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், மூக்கிலிருந்து சளி வடிதல், தீனி உட்கொள்ளாமை மற்றும் இறுதியாக இறப்பு ஏற்படுகிறது. இந்நோயினை தடுக்க 4 மாதங்களுக்கு மேல் வயதுடைய வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியினை பெற இயலும்.

அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாட்கள் நீடிக்கும், சோர்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்த சளி வடிந்து உறைந்து இருத்தல் கண்களில் புரை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல் ஆகியவை ஆட்டுக்கொல்லி நோய் அறிகுறிகளாகும். நோய் வராமல் இருக்க செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு குறிப்பாக 4 மாதத்திற்கு மேல் வயதுடைய ஆடுகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட வேண்டும். 

இன்று ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணியினை திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் அம்மன் கோவில் திடலில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.சுகுமார் தொடங்கி வைத்து ஆடுகளுக்கு தடுப்பூசியினை செலுத்தினார்.

இன்று நடைபெற்ற முகாமில் 200 வெள்ளாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்போர்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான தாது உப்புகளும் வழங்கப்பட்டது. ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப்போடும் முகாம் இன்று 28.04.2025 முதல் 27.05.2025 முடிய நடைபெறவுள்ளது மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு தடுப்பூசிப் பணி மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே ஆடு வளர்ப்போர் தங்களது ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சங்கரநாராயணன், துணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி, உதவி இயக்குநர்கள் சுமதி, ஆபிரகாம் ஜாப்ரி, ரஹ்மத்துல்லாஹ், தங்கராஜ், முதன்மை மருத்துவர் க.முருகன் மற்றும் கால்நடை நோய் புலனாய்ப்பிரிவு உதவி இயக்குனர் பி.முருகன் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா சுந்தர் , கால்நடை உதவி மருத்துவர்கள் சிவராமகிருஷ்ணன், தமிழரசன், சரண்யா, கோகுல், கால்நடை ஆய்வாளர்கள் ரமேஷ், பேச்சியம்மாள், சுடலைமுத்து மற்றும் உதவியாளர்கள் கஸ்தூரி, அருள்மாரி செல்வி, லட்சுமணன், பாருக் அலி, சேது ,வகாபுதீன் சுடலைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory