» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்

சனி 31, மே 2025 4:33:04 PM (IST)



திருநெல்வேலியில் புகையிலை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்து கொண்டார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணாநகர் என்சிசி அலுவலகம் அருகில் இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார அலுவலகம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, திருநெல்வேலி மாவட்ட பிரம்மாகுமாரிகள் இயக்கத்துடன் இணைந்து போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியில் கலந்து கொண்டார்.

இப்பேரணி பாளையங்கோட்டை NCC Battalian அலுவலகத்திலிருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக மாவட்ட சுகாதார அலுவலகம் வரை, 2 கிலோ மீட்டர் வரை நடைபெற்றது. இதில் NCC மாணவ மாணவியர்கள், சேரன்மகாதேவி, மானூர் மற்றும் ரெட்டியார்பட்டி வட்டார மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் என மொத்தம் 500 நபர்கள் கலந்துகொண்டனர். 

இப்பேரணியில் புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளான "புகையிலை தொழில்துறையின் வசீகரிக்கும் தந்திரங்களை அம்பலப்படுத்துதல்" பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் புகையிலை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதை மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோஷங்கள் எழுப்பியும் மற்றும் பதாகைகள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, திருநெல்வேலி மாவட்ட பிரம்மாகுமாரிகள் இயக்கத்துடன் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இன்று முதல் 30 நாட்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விழிப்பணர்வு ஏற்படுத்த தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தலைமையில் மாணவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் கீதாராணி, மாவட்ட கலால் ஆணையர் வள்ளிக்கண்ணு, கலால் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory