» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)
புளியங்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி ரெங்க கருப்பன் தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் கதிரேசன் (37), இவர் ஓட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக வேலை செய்து வருகிறார். விடுமுறையில் புளியங்குடிக்கு வந்த கதிரேசன் இன்று மாலை தனது பைக்கில் புளியங்குடி பேருந்து நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ராயகிரியில் இருந்து கொல்லம் நோக்கி வைக்கோல் லோடு ஏற்றி சென்ற லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் கதிரேசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் இறந்த கதிரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து லாரியை ஒட்டி வந்த கொல்லத்தை சேர்ந்த சசிதரன் மகன் பிரதீப்பை (39) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் இறந்த கதிரேசனுக்கு சங்கீதா என்ற மனைவியும் ஒரு மகளும் (4) உள்ளனர். லாரி மோதி நீதிமன்ற ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

திருநெல்வேலியில் மே 29ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
செவ்வாய் 27, மே 2025 4:14:11 PM (IST)
