» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!

வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)

கடையநல்லூர் அருகே கேபிள் டிவி வயரை சரி செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சித்திக். இவர் அப்பகுதியில் கேபிள் ஆபரேட்டராக உள்ளார். இவரது மகன் முகம்மது பாசில் (24), படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருந்தார்.

அச்சன்புதூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்றும் மழையும் பெய்ததால் வீடுகளில் சரிவர கேபிள் டி.வி. தெரியவில்லை. எனவே அங்குள்ள தெருவில் கேபிள் டி.வி. வயரை சரி செய்வதற்காக முகம்மது பாசில் இழுத்தார். அப்போது கேபிள் வயர் வழியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட முகம்மது பாசிலை அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முகம்மது பாசில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory