» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)
பாபநாசம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 33 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன.
இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், வனத்துறையினர் அப்பகுதிகளில் குரங்குகளை பிடிக்க பொறி வைத்தனர்.
இந்த நிலையில் 33 குரங்குகள் பாபநாசம் வனச்சரக வனப்பணியாளர்கள் மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் நல்ல முறையில் திரும்ப விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

திருநெல்வேலியில் மே 29ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
செவ்வாய் 27, மே 2025 4:14:11 PM (IST)
