» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி உட்பட தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்!
வியாழன் 12, ஜூன் 2025 10:20:42 AM (IST)
தமிழகம் முழுவதும் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இடமாற்றம்:
1) மகேஷ்குமார் - டி.ஐ.ஜி. ஆக இருக்கும் இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். தற்போது கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
2) ஜெயந்தி- கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி. ஆக பணியாற்றும் இவர், சென்னை தொழில்நுட்பப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
3) சிபி சக்கரவர்த்தி- தென்சென்னை இணை கமிஷனராக பணியாற்றும் இவர், தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
4) கல்யாண்- சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக உள்ள இவர், தெற்கு மண்டல இணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.
5) திஷா மிட்டல்- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆக உள்ள இவர், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
6) உமா- சேலம் சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றும் இவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
7) நாகஜோதி- மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார்.
8) அமனத்மான்- காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், மனித உரிமை மற்றும் சமூகநீதி உதவி ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
9) லாவண்யா- போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக சென்னையில் பணியாற்றும் இவர், மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
10) பி.கீதா- சேலம் தலைமையக துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.
11) வி.கீதா- திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக உள்ள இவர், சேலம் தலைமையக துணை கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.
12) வேல்முருகன்- சேலம் தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், தாம்பரம் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13) பிரபாகர்- தாம்பரம் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை சைபர் குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பதவியேற்க உள்ளார்.
14) அருண் கபிலன்- நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி. ஆக பதவியேற்க உள்ளார்.
15) செல்வக்குமார்- மதுரை சிவில் சப்ளை சி.ஐ.டி. சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி உயர்வுடன் இடமாற்றம்:
16) சுப்பிரமணிய பாலச்சந்திரா- தேனி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சேலம் தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
17) சாமுவேல் பிரவீன் கவுதம்- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் இவர், பதவி உயர்வு பெற்று, திருப்பூர் நகர வடக்கு துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.
18) பிரசன்னகுமார்- நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்தார் சபாநாயகர்!
வெள்ளி 13, ஜூன் 2025 12:46:34 PM (IST)

வள்ளியூரில் 1 கிலோ பறிமுதல் : வாலிபர் கைது!
வெள்ளி 13, ஜூன் 2025 10:52:23 AM (IST)

அசைவ உணவு சாப்பிட்ட 4பேர் உயிரிழப்பு: முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:44:56 AM (IST)

தொழில்முனைவோர் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:24:01 PM (IST)

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 12, ஜூன் 2025 12:37:21 PM (IST)

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!
புதன் 11, ஜூன் 2025 4:11:22 PM (IST)
