» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!

புதன் 11, ஜூன் 2025 4:11:22 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், மலையாளமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இன்று நடைபெற்ற சிறப்புகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 108 முகாம்கள் நடத்தப்படும். 

முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினைசரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிட்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இன்று நடைபெறும் முகாம் 11.06.2025 இன்று முதல் 18.03.2026 வரை நடைபெறவுள்ளது.

மே 2025 முதல் மார்ச் 2026 வரை கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு, சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சங்கரநாராயணன், திருநெல்வேலி கோட்ட உதவி இயக்குநர் மரு.சுமதி, பிரதம மருத்துவர் முருகன், உதவி மருத்துவர்கள் மாரியப்பன், அப்துல் காதர், சரண்யா, ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுறை வார்டு உறுப்பினர்கள் முருகன், மாரியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory