» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு நிதி : நயினார் நாகேந்திரன் தகவல்!
புதன் 11, ஜூன் 2025 3:55:27 PM (IST)
கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி நிதி அளித்துள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் உண்மையை மறைத்து பேசுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று இபிஎஸ் தலைமையில் கூட்டணி கட்சி ஆட்சி அமையும். மக்கள் வாக்களித்த பின்னர்தான் எது வலிமையான கூட்டணி என்பது தெரியவரும். தாங்கள் தான் வலிமையான கட்சி என்று கூறிக் கொள்ளும் திமுக தேர்தலில் தனித்து நிற்க தயாரா. திமுக கூட்டணிக்குள் சலசலப்பு குறித்து போக போக தெரியும்.
மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாநாட்டுக்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த மாநாடு பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த மாநாட்டில் எல்லோரும் கலந்து கொள்ளலாம். திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் உள்ள முருக பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.
மதவாதம் இருக்கக் கூடாது. மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள். இந்து என்பது ஒரு பண்பாடு, ஒரு வழிமுறை. இந்து என்பது மதம் இல்லை. ஒரு மதத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வருபவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். தமிழ் மொழிக்கு மோடி அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. திருக்குறளை 63 மொழிகளில் மொழிபெயர்த்து உலகம் முழுமைக்கு கொண்டு சேர்த்துள்ளார் மோடி. காசியிலும், குஜராத்திலும் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
கீழடி விவகாரத்தில் உண்மை நிலையை நேரில் சென்று கண்டறிந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்தி பாதுகாப்புக்கு மிகப்பெரிய உறுதியை பிரதமர் மோடி தந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மட்டும் ரூ 10 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் உண்மையை மறைத்து பேசுகிறார்கள் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில்முனைவோர் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:24:01 PM (IST)

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 12, ஜூன் 2025 12:37:21 PM (IST)

திருநெல்வேலி உட்பட தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்!
வியாழன் 12, ஜூன் 2025 10:20:42 AM (IST)

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!
புதன் 11, ஜூன் 2025 4:11:22 PM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.02 கோடி வங்கி கடன்: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
புதன் 11, ஜூன் 2025 4:03:27 PM (IST)

வனவிலங்குகளை வேட்டையாடிய அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்!
புதன் 11, ஜூன் 2025 8:32:35 AM (IST)
