» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் பயணிகள் சங்கம் கோரிக்கை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர் பாரூக், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 1.33 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மீட்டர் கேஜ் காலத்தில் மூன்று தண்டவாளங்களுடன் 24 மணி நேரமும் நிலைய மேலாளருடன் பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து பெற்று இருந்தது. அகலப் பாதையாக மாற்றப்பட்டப் பிறகு தரம் குறைக்கப்பட்டு,ஒற்றைத் தண்டவாளத்துடன் இயங்கி வருகிறது.
மதுரை ரயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் 22 ஆம் இடத்தில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. இத்தகு சிறப்பு பெற்ற கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

த.வெ.க., வேட்பாளருக்காக பிரச்சாரம்: நண்பரின் மகனுக்காக வாக்கு சேகரித்த நடிகர் ராமராஜன்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:49:54 PM (IST)

குடும்பத் தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:03:40 AM (IST)


Monnamohamed M rtd. Prison dept. Officio Kallidai kurichiOct 5, 2025 - 04:31:56 PM | Posted IP 162.1*****