» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வங்கி மேலாளரிடம் நூதன முறையில் ரூ.47 லட்சம் மோசடி: நெல்லை வாலிபர் கைது!
திங்கள் 6, அக்டோபர் 2025 10:11:45 AM (IST)
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி வங்கி மேலாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, கனையார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (36). இவர் அரியலூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ராஜசேகர் தனக்கு கூகுளில் வந்த லிங்கை தொட்டு ஒரு டிரேடிங் குழுவில் இணைந்துள்ளார்.
இக்குழுவிலுள்ள அட்மின்கள் 500 சதவீதம் லாபம் பெறலாம் எனக் கூறி அறிவுரைகள் வழங்கியதையடுத்து, அவர்கள் கூறியபடி தனது செல்போனில் தனியார் செயலியை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்துள்ளார். முதலில் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்தை தனது வங்கி கணக்கின் மூலமாக எடுத்துள்ளார்.
மேலும் அதிக லாபம் பெறலாம் என பல்வேறு தவணைகளாக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.46 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். இதனால் அந்த செயலியின் வாலட்டில் ரூ.25 கோடி சேர்ந்துள்ளது. இந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது 2 சதவீதம் சேவை கட்டணமாக ரூ.50 லட்சத்தை கேட்டுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராஜசேகர் இது தொடர்பாக 1930 என்ற இணைய குற்ற உதவி எண் மூலமாக அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், குற்ற செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்கு எண்ணின் உரிமையாளர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் வேலு (31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) முத்தமிழ்செல்வன் வழிகாட்டுதலின் பேரில், இன்ஸ்பெக்டர் இசைவாணி தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த வேலுவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக வேலுவிடம் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் 2 செல்போன்கள், 6 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். அட்டைகள், வங்கி கணக்கு புத்தகம், ஆபீஸ் சீல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




