» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணியினை உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, துவக்கி வைத்தார்.
பாரம்பரிய பனைமரம் வளர்ப்பதன் மூலம் கண்மாய், ஏரி, ஊரணி கரை மற்றும் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்யும் போது நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இலட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கங்கைகொண்டான் நம்ம ஊரு குளோபல் ஸ்கூல், அரசு மேல்நிலை பள்ளி கங்கைகொண்டான், சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்கள் என அனைவரும் இணைந்து பனை விதைகளை நட்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து, மாவட்ட வனச்சரக அலுவலர் ஜெய பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் பெளிக்ஸ் பிரான்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:10:26 PM (IST)
