» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைககள் காப்பகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிப்காட் திட்ட இயக்குநர் மாரிமுத்து, குழந்தை காப்பகத்திற்கு பயில வரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார்கள்.
கங்கைகொண்டானில் இயங்கி வரும் "சிப்காட் தொழிற் பூங்காவில்” உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக சிப்காட் திட்ட அ.லுவலகத்தில் சுமார் 605 சதுர அடி பரப்பளவில் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள "குழந்தைகள் காப்பகம்” கட்டப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் காப்பகத்தில் நல்ல பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் குழந்தைகளுக்கு அன்பாகவும் பொறுமையாகவும் கல்வி கற்பித்தலோடு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தும் நோக்கில் குழந்தைகளை நன்கு பராமரிக்கவும், கல்வியுடன், விளையாட்டுகள் கற்றுக்கொடுப்பதற்கும் சூழ்நிலை உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிப்காட் அலுவலர் அழகுவேல்முருகன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சிப்காட் நிறுவன பணியாளர்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




