» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தீபாவளி புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்: கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல்!

ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:21:42 AM (IST)



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை, பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள், பலகாரங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வாரவிடுமுறை தினமான நேற்று ஏராளமானவர்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லை வடக்கு ரத வீதி, வண்ணார்பேட்டையில் தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகள் எடுக்க வந்த பெரும்பாலானவர்கள் மேம்பாலத்திற்கு கீழே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தார்கள்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வண்ணார்பேட்டை பகுதியில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory