» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் நாயை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: வீடியோ வைரலானதால் பரபரப்பு!

வெள்ளி 10, அக்டோபர் 2025 8:11:23 PM (IST)

தூத்துக்குடியில் வளர்ப்பு நாயை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி நேதாஜிநகர் 11-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவர். இவர் வீட்டில் 2 நாய்களை வளர்த்து வந்தார். இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம் நாய்களை சங்கிலியால் கட்டி போட்டு வைப்பது வழக்கம். அந்த வழியாக யாரேனும் சென்றால் அந்த நாய்கள் குரைக்கும். அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாரிசெல்வம் (22). இவர் அந்த வழியில் செல்லும் போது அந்த நாய்கள் குரைத்து உள்ளன. 

இதனால் நாயின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடிபோதையில் சென்ற மாரிசெல்வத்தை பார்த்து நாய்கள் குறைத்து உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் 2 நாய்களையும் சரமாரியாக கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஒரு நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மற்றொரு நாய் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.

இது குறித்து மாரியப்பன் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதே நேரத்தில் மாரிசெல்வம் நாயை அடித்தை வீடியோ பதிவு செய்து புளூகிராஸ் அமைப்புக்கும் அனுப்பினார்களாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதைத் தொடர்ந்து சிப்காட் போலீசார் மாரி செல்வத்தை கைது செய்தனர். மேலும் புளூகிராஸ் அமைப்பினர் காயம் அடைந்த நாயை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory