» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் அன்புமணியின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு
திங்கள் 6, அக்டோபர் 2025 12:51:24 PM (IST)
நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபயணம் மேற்கொள்ள இருந்தார்.
இதற்கிடையில், கரூரில் நடிகர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தொடங்கி உள்ளது.
இந்நிலையில், நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போலீசார் அறிவுறுத்தலை ஏற்று அன்புமணி தனது நடைபயணத்தை ரத்து செய்தார். மேலும் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மக்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)
