» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பக்கிள் ஓடையை 5 மீட்டர் அகலப்படுத்த நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வியாழன் 16, அக்டோபர் 2025 9:01:09 AM (IST)

தூத்துக்குடி நகருக்குள் வரும் தண்ணீர் கடலுக்கு செல்ல முன்பு 3 வடிகால்கள் மட்டுமே இருந்தன. தற்போது 14 வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து மேயர் பேசும் போது, மாநகராட்சி பகுதியில் மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மழைநீர் எங்கேயும் தேங்காமல் வழிந்தோடும் வகையில் பணிகள் செய்யப்பட்டு உள்ளன.
நகரின் பிரதான மழைநீர் வடிகாலான பக்கிள் ஓடை முழுவதும் 5 மீட்டர் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகருக்குள் வரும் தண்ணீர் கடலுக்கு செல்ல முன்பு 3 வடிகால்கள் மட்டுமே இருந்தன. தற்போது 14 வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து வடிகால்களும் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மழைநீர் தேங்கினாலும் 2 முதல் 3 மணி நேரத்தில் வடிந்துவிடும்.
அதுபோல பாதாள சாக்கடை திட்டத்தின் வழியாகவும் மழைநீர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 28 எம்எல்டி கழிவுநீரை வெளியேற்றும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.
முகாமில் உதவி ஆணையர் பாலமுருகன், நகர்நல அலுவலர் சரோஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

பெ.ராஜேஷ் செல்வரதி--தொல்லியல் ஆர்வலர்-தூத்துக்குடிOct 16, 2025 - 09:41:13 AM | Posted IP 104.2*****