» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடல்போல் காட்சியளிக்கும் தருவை மைதானம் : விளையாட்டு பயிற்சிகள் ரத்து
வியாழன் 16, அக்டோபர் 2025 3:15:56 PM (IST)

தூத்துக்குடியில் பெய்த கன மழையால் மாவட்ட விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பின்னர், நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை மழை வெளுத்து வாங்கியது.
தூத்துக்குடியில் கன மழையால் மாவட்ட விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும், கால்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும், நடைபயிற்சிக்கு மக்களை அனுமதிக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
அன்புOct 16, 2025 - 05:37:01 PM | Posted IP 172.7*****
இந்த விளையாட்டு மைதானத்தை சுற்றி பெரிய வடிகால் இருக்கிறது ஆனால் அதன் மட்டம் இதைவிட உயர்வாக இருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் இருக்கின்றது விளையாட்டு மைதானத்தை தான் உயர்த்த வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

ஆமாOct 17, 2025 - 02:01:11 PM | Posted IP 104.2*****