» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை!

வெள்ளி 17, அக்டோபர் 2025 12:02:33 PM (IST)



தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி டூவிபுரம் மெயின் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தினர் சாலையை தோண்டி பைப் லைனை சரி செய்தனர். இதன் பின்னர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், அந்த பள்ளம் பெரிதாகி உள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதன் அருகே தாலூகா அலுவலகம், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

அன்புOct 17, 2025 - 12:25:23 PM | Posted IP 162.1*****

வாய்ப்பே இல்லை இதெல்லாம் சின்ன வயசுல இருந்தே பார்த்துகிட்டு வாரோம் இதுவரை சரி ஆகல இனிமேலும் சரியா ஆகாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory