» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்காக மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தின் பெயரில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால். இந்த பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும் பெண் பயணிகளிடம், சில டிரைவர்கள் அல்லது கண்டக்டர்கள் ‘ஓசி’ பயணம் செய்வதாக அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.
அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் நெல்லையிலும் அரங்கேறி உள்ளது. நேற்று முன்தினம் இரவு நெல்லை ஐகிரவுண்டு பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி மகளிர் விடியல் பயண பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இதில் ஏறிய பெண் ஒருவர், கொக்கிரகுளம் பகுதியில் இறங்க வேண்டும் என்று கூறி டிக்கெட் எடுத்தார். ஆனால் டிரைவர், உரிய பஸ் நிறுத்தம் வந்தபிறகும் அதனருகே பெண்ணை இறக்காமல் சற்று தள்ளி இறக்கிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் தட்டிகேட்டபோது, அவரை பஸ் டிரைவர் ஓசி பயணம் செய்வதாக கூறி அவதூறாக பேசி திட்டி உள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் பயணி அங்கிருந்து புறப்பட்டு சென்று தனது உறவினர்களிடம் நடந்தவற்றை கூறினார். பின்னர் அவர்கள் அனைவரும் உடனடியாக சந்திப்பு ரெயில் நிலையம் வந்தனர். அதற்குள் அந்த பஸ் அங்கு வந்துவிட்டது. பஸ் புறப்பட தயாரானபோது, பெண் பயணியும், உறவினர்களும் சேர்ந்து பஸ்சை மறித்து டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. அதன்பேரில், நெல்லை மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட டிரைவர் முருகேசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்’’ என தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)




