» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)
நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்துக்கும், குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை மெஞ்ஞானபுரத்துக்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ராபர்ட் வீரகேரளம்புதூருக்கும், கடையநல்லூர் ஆடிவேல் ஆலங்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர குமரி மாவட்டத்தில் பணிபுரியும் அந்தோணியம்மாள், ஜெயலட்சுமி, உமா ஆகிய 3 பெண் இன்ஸ்பெக்டர்களும் அந்த மாவட்டத்துக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் குமரி மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேசமணி நகர் ஜெசி மேனகா, சுசீந்திரம் பெனடிக்ட், புதுக்கடை மகேந்திரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)


