» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:32:02 AM (IST)

திராவிட மாடல் ஆட்சி தொடரும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதிப்படி 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முறையீடு செய்யலாம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிப்.14ல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:21:45 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)


விஜய் ரசிகன்Feb 13, 2026 - 12:30:43 PM | Posted IP 104.2*****