» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மக்களோடு மக்களாக இருப்பவர்களுக்கே உங்கள் வாக்கு : தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:55:34 AM (IST)



தேர்தலுக்காக மட்டும் வருபவர்களைப் புறக்கணித்து, எப்போதும் மக்களோடு பணியாற்றும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்" எனத் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரத்தில் பேசினார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கீதா ஜீவன், இன்று மாநகராட்சியின் 48, 49, 50 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சிஜிசி காலனி, செல்சீலினி காலனி, கால்டுவெல் காலனி, 3 சென்ட் அந்தோணியார்புரம், சாந்தி நகர் மற்றும் அமுதா நகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மக்களிடையே அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி தொகுதியில் 211 புதிய மின்மாற்றிகள், 13 நகர் நல அலுவலகங்கள், புதிய அங்கன்வாடிகள் மற்றும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். சாலை, கால்வாய், மின்விளக்கு வசதிகள் என மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், தான் தேர்தலுக்காக மட்டும் வருபவள் அல்ல என்றும், மக்களின் இன்ப துன்பங்களில் எப்போதும் பங்கெடுப்பவள் என்றும் தெரிவித்தார். 

குறிப்பாகக் கொரோனா காலம் மற்றும் மழை வெள்ளக் காலங்களில் மக்களுக்காக முன்னின்று பணியாற்றியதை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், தமிழகத்தை வஞ்சிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர், விசிக மாவட்டச் செயலாளர் விமல் வங்காளி, எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் மைதீன் கனி, இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து

கொத்தடிமைApr 17, 2026 - 12:36:20 PM | Posted IP 162.1*****

அடிக்கடி வெள்ளம் வரும் பகுதிகளில் கால்வாய்களை உருப்படியாக கட்டி இருந்தால் வெள்ளம் வந்திருக்காது . அது கூட அடிப்படை அறிவும் இல்லை .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory