» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ஜூலை 14-ஆம் தேதி மின்நிறுத்தம்!

வெள்ளி 10, ஜூலை 2026 4:22:53 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி சிப்காட் 110/22 கே.வி துணை மின்நிலையத்தில் வரும் 14.07.2026 செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என நகர் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் லெ.சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

இதன்படி  மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம், 

சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், 

பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலிநிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

BalaaJul 12, 2026 - 01:39:54 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கிராமங்களில் ட்ரோன் சிசிடிவி கேமரா பதிவு செய்து சாலைகளை ஆக்கிரமித்து பாதசாரிகளின் நடைமேடைகளில் ஆக்கிரமித்து நிறுத்தும் அதாவது சொந்த வாகன நிறுத்த நிலம் இல்லாது அல்லது வாடகை வாகன நிறுத்த நிலமில்லாத தனிநபர் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தொழில் சார் வாகனங்கள் வாடகைக்கு விடும் வாகன நிறுத்தமில்லாது LMV/HMV இலகு ரக/ கனரக வாகன ஊர்திகளை நிறுத்துபவர்களுக்கு நாள்தோறும் அபராதம் விதிக்க வேண்டும். அதேபோல மின்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிட பகுதிகள் அகற்ற ட்ரோன் சிசிடிவி ஜிபி எஸ் இணைத்த காணோளி பதிவு மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory