» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற 'சாரல் திருவிழா' கலைவாணர் அரங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இவ்விழாவைத் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இன்று தொடங்கிய இச்சாரல் திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கிராமியக் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு வண்ணமயமான பண்பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


