» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
திசையன்விளை மற்றும் நாங்குநேரி வட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர்க் கால்வாய் தோண்டும் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 2022-2023 ஆம் ஆண்டுகளில் இறுதி தீர்ப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டன. உரிமையை நிலைநாட்டும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத நில உரிமையாளர்களின் இழப்பீட்டுத் தொகை வருவாய் வைப்பீடாக (Revenue Deposit) வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இரண்டு ஆண்டுகள் கடந்தும் தொகை பெறாத உரிமையாளர்களுக்கு உடனடியாக நிதி வழங்க அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகங்களில் காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் நாட்கள் & கிராமங்கள்:
ஆகஸ்ட் 04, 2026: திசையன்விளை வட்டம் – விஜயநாராயணம் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3)
ஆகஸ்ட் 05, 2026: நாங்குநேரி வட்டம் – சிந்தாமணி, முனைஞ்சிப்பட்டி
ஆகஸ்ட் 06, 2026: நாங்குநேரி வட்டம் – காடன்குளம் திருமலாபுரம்
ஆகஸ்ட் 11, 2026: திசையன்விளை வட்டம் – உறுமன்குளம், முதுமொத்தான்மொழி, கோவன்குளம், கோட்டைகருங்குளம்
ஆகஸ்ட் 13, 2026: திசையன்விளை வட்டம் – குமாரபுரம், திசையன்விளை
ஆகஸ்ட் 18, 2026: திசையன்விளை வட்டம் – இட்டமொழி, இராமகிருஷ்ணாபுரம்
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
நில உரிமையாளர்கள் பின்வரும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் நேரில் ஆஜராக வேண்டும்:
கிரையப் பத்திரம் & மூலப் பத்திரம்
தற்போதைய 10(1) கணினி பட்டா
வாரிசுதாரர்கள் எனில்: இறப்புச் சான்றிதழ் & வாரிசுச் சான்றிதழ்
01.01.1975 முதல் தற்போது வரையிலான வில்லங்கச் சான்றிதழ் (EC)
நில உரிமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)


