» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:14:59 AM (IST)

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (60). ஓட்டுநரான இவர், தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். புதூர் பாண்டியாபுரம் அருகே, நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவர் பிரிக்கப்பட்டு வழி அமைக்கப்பட்டிருந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்காகச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, குறுக்குச்சாலையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக மந்திரமூர்த்தியின் பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மந்திரமூர்த்தி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த புதியம்புத்தூர் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கே. வேலாயுதபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜஸ்டின் டேனியல் (48) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

makkalAug 3, 2026 - 01:00:19 PM | Posted IP 104.2*****

rip

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory