» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராகுல் காந்தியுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் சந்திப்பு!

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 1:31:24 PM (IST)

RahulGAndhiPerumalsamy.jpg

சென்னை மகாபலிபுரத்தில் ராகுல் காந்தியுடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னை மகாபலிபுரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்குக் கட்சிச் செயல்பாடுகள், களப்பணிகள் மற்றும் கொள்கைப் பயிற்சிகளை அளிக்கும் வகையில் 10 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமின் இறுதி நாளில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, மாவட்டத் தலைவர்களுடன் நேரடியாக அமர்ந்து சுமார் 3 மணி நேரம் ஆலோசனைகள் வழங்கிப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சி முகாமின் நிறைவாக, அதில் பங்கேற்ற மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


மக்கள் கருத்து

Black pandiAug 2, 2026 - 01:45:05 PM | Posted IP 104.2*****

Simply waste

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory