» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

aadiperukkukk.jpg

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருகே உள்ள வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இறச்சகுளம் முப்பிடாரி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பழையாற்றை அடைந்ததும், கொண்டு வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்தனர். 

தொடர்ந்து, புதிய தாலிக்கயிறு மாற்றி, ஆற்றங்கரையில் அம்மனை வேண்டிச் சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஆடிப்பெருக்கையொட்டி பழையாற்றுப் பகுதியில் விழாக்கோலம் பூண்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory