» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருகே உள்ள வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இறச்சகுளம் முப்பிடாரி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பழையாற்றை அடைந்ததும், கொண்டு வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்தனர்.
தொடர்ந்து, புதிய தாலிக்கயிறு மாற்றி, ஆற்றங்கரையில் அம்மனை வேண்டிச் சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஆடிப்பெருக்கையொட்டி பழையாற்றுப் பகுதியில் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)


