» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருட்டு வழக்கில் கைதான த.வெ.க. நிர்வாகி நீக்கம்: தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அறிவிப்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 8:08:20 AM (IST)
தூத்துக்குடியில் 1 கோடி சீனப் பட்டாசு திருட்டு வழக்கில் கைதான வழக்கறிஞர் ஜேசுதாஸ் த.வெ.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டதாக வழக்கறிஞர் அ. ஜேசுதாஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாகத் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் சாமுவேல்ராஜ் அறிவித்துள்ளார்.தூத்துக்குடி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அ. ஜேசுதாஸ் (த/பெ ஆல்பர்ட்), கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், இவர் கட்சியின் கொள்கைகளுக்கும், கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் முற்றிலும் முரணான வகையில் செயல்பட்டு, கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் அ. ஜேசுதாஸ் ஆகஸ்ட் 3, முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாகவும், முழுமையாகவும் நீக்கப்படுகிறார்.
கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)



BabuAug 4, 2026 - 02:23:33 PM | Posted IP 162.1*****