» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:46:37 AM (IST)

udangudithermal.jpg

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் இம்மாத இறுதியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படவுள்ள நிலையில், 2-வது அலகில் வரும் டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் சார்பில் உடன்குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுகளுடன் கூடிய மிக உயர் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் அலகுக்கான மின்சார உற்பத்தி சோதனை ஓட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த சோதனை ஓட்டம் தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாக 72 மணி நேரம் முழு கொள்ளளவில் மின் உற்பத்தி எட்டப்பட்டால் உடனடியாக வணிக ரீதியிலான உற்பத்திக்கு மாற்றப்படும். அந்த வகையில், இம்மாத இறுதியில் உடன்குடி முதல் அலகு வணிக உற்பத்தியைத் தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

டிசம்பரில் சோதனை ஓட்டம்: முதல் அலகில் வணிக உற்பத்தி தொடங்கப்படுவதைத் தொடர்ந்து, 2-வது அலகில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம் தொடங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் 2 அலகுகளும் முழுத் திறனில் செயல்படத் தொடங்கும்.

 உடன்குடி வளாகத்தில் மேலும் 3 அலகுகளை நிறுவுவதற்கான விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. நிலக்கரி கொண்டு வருவதற்காகச் சிறப்பு கப்பல் தளமும், மூடிய கன்வேயர் அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 6.80 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட நிலக்கரி சேமிப்புத் தளங்களும், கடல் நீரைக் குடிநீராக மாற்றும் நன்னீர் உற்பத்தி இயந்திரங்களும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory