» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)
கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஜவுளிகடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், கொட்டாரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் குங்கர்சிங் (25). இவர் தனது சகோதரர் சேத்தன் சிங்குடன் கொட்டாரம் பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு குங்கர்சிங் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கொட்டாரம் புறப்பட்டார்.
ரெயில் நிலையம் சந்திப்பு அருகே வந்த போது, எதிரே பறக்கை தெற்கு தெருவை சேர்ந்த பைசல் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள் களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் குங்கர் சிங், பைசல் மற்றும் அவருடன் வந்த பறக்கை யைச் சேர்ந்த இர்பான் (21) ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவிலில்உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குங்கர்சிங் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
புதன் 12, மார்ச் 2025 3:38:27 PM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!
புதன் 12, மார்ச் 2025 12:23:07 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை: அன்பில் மகேஸ் விளக்கம்
புதன் 12, மார்ச் 2025 10:44:32 AM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)

கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)
