» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதவ் அர்ஜூனாவுடன் எந்த தொடர்புமில்லை : லாட்டரி மார்ட்டின் மகன் அறிக்கை!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:27:52 PM (IST)

"ஆதவ் அர்ஜூனா செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டே, எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்.

அவருக்கிருக்கும் பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார். அவர் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடரும் பட்சத்தில், வழக்கு தொடரப்படும். பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory