» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி கண்ணாடி கண்ணாடி இழை பாலத்தில் ஆய்வுப் பணி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!
சனி 12, ஏப்ரல் 2025 7:52:45 PM (IST)

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் ஏப்.15 முதல் 5 நாட்கள் ஆய்வு பணி நடைபெறவுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை M/S ரைட்ஸ் நிறுவனம் (மத்திய பொதுத்துறை நிறுவனம்,) அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி ஆகிய நிறுவனங்கள் 15.04.2025 முதல் 19.04.2025 வரை ஐந்து நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேற்படி, ஆய்வுகாலத்தில் (5 நாட்களுக்கு) கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க படமாட்டார்கள். எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:51:33 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:46:43 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு உட்பட 6 திட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:27:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின்: முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 3:54:06 PM (IST)

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:50:49 PM (IST)

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:43:07 PM (IST)

adv BabuApr 13, 2025 - 01:22:31 PM | Posted IP 104.2*****