» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
புதன் 28, மே 2025 8:47:25 AM (IST)
குளச்சலில் மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் அதனை ஒழிக்கும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு இடங்களில் போதைப்பொருள்கள் சிக்கி வருகின்றன.
இந்தநிலையில் குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லியோன் தலைமையிலான போலீசார் குளச்சல் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார்.
இதையடுத்து மோட்டாா் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒரு பிளாஸ்டிக் கவரில் 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாணியக்குடி அருகே உள்ள பனவிளையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)
