» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு
வியாழன் 29, மே 2025 9:06:01 AM (IST)

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி கடந்த 23-ஆம் தேதி தருவைகுளத்தில் தொடங்கியது. அங்கு 215 விசைப்படகுகளும், கடந்த 26-ஆம் தேதி வேம்பாரில் நடைபெற்ற ஆய்வில் 28 விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில், உதவி இயக்குநர் ஜெனார்த்தனன் தலைமையிலான 6 ஆய்வுக் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட 183 விசைப்படகுகள், பதிவு செய்யப்படாத 66 விசைப்படகுகள் என மொத்தம் 249 விசைப்படகுகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு அறிக்கை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். இதில், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதனை நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் 6-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)
