» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்டோ - கார் மோதிய விபத்தில் தேமுதிக நிர்வாகி பலி : நண்பர்கள் 2பேர் காயம்

வியாழன் 29, மே 2025 11:23:03 AM (IST)

தூத்துக்குடி அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தேமுதிக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள்  2பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கருப்பசாமி (42), இவர் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக பிரதிநிதியாக உள்ளார். நேற்று தனக்கு சொந்தமான ஆட்டோவில் நண்பர்கள் 2பேருடன் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். 

பின்னர் அவர் குளத்தூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை கல்மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது திருச்செந்தூரில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி சென்ற ஒரு கார் ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

மேலும் ஆட்டோவில் வந்த 2 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கருப்பசாமி உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த முதுகுளத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory