» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆட்டோ - கார் மோதிய விபத்தில் தேமுதிக நிர்வாகி பலி : நண்பர்கள் 2பேர் காயம்
வியாழன் 29, மே 2025 11:23:03 AM (IST)
தூத்துக்குடி அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தேமுதிக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2பேர் காயம் அடைந்தனர்.

பின்னர் அவர் குளத்தூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை கல்மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது திருச்செந்தூரில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி சென்ற ஒரு கார் ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் ஆட்டோவில் வந்த 2 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கருப்பசாமி உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த முதுகுளத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)
