» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற வாலிபர் கைது!
வியாழன் 29, மே 2025 12:06:47 PM (IST)
திருவாரூர் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்துச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்துச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் கீரனூர் சோதனை சாவடியில் காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என்று ஒவ்வொரு பேருந்திலும் சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த பேருந்தில் இருந்த நபர் ஒருவரின் பையில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ரூ.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூனிஸ் (40) என்றும், திருவாரூரில் உள்ள ஒரு நபரிடம் இருந்து ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை வாங்கிக் கொண்டு மயிலாடுதுறை சென்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)
