» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளிகளில் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

செவ்வாய் 3, ஜூன் 2025 10:08:56 AM (IST)



குமரி மாவட்டத்தில் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியதையொட்டி, முக்கலம்பாடு, சாஸ்தான்கோவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள்pல் பயில தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவ மாணவியர்கள் காலை உணவினை தவிர்த்து இன்னல் அடைவதை கருத்தில் கொண்டு அவர்களின் பசியாற்ற காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் தமிழ்நாடு அரசால் திங்கள்கிழமை தோறும் பொங்கல், சாம்பார் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று புதிய கல்வியாண்டு தொடங்கியதையொட்டி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவிபெறும் 446 பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் 27009 மாணவ, மாணவியர்களுக்கு பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முக்கலம்பாடு ஆர்.சி. தொடக்கபள்ளி மற்றும் சாஸ்தான்கரை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு தயாரிப்பதை பார்வையிட்டதோடு, உணவின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் இருப்பு பொருட்கள் தேவையான அளவு இருக்கிறதா என்றும், மாணவ மாணவியர்களுக்கு தட்டுபாடின்றி உணவுகள் வழங்கிட தலைமையாசிரியருக்கும் பணியாளர்களுக்கும், துறை சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

முன்னதாக புதிய கல்வியாண்டு தொடங்கியதையொட்டி முக்கலம்பாடு ஆர்.சி தொடக்கப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வரவேற்றார்.  ஆய்வில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory